Yesu raja nandri endru Lyrics Song Chords PPT - இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்
செய்த நன்மை நினைத்து
துதி சொல்லி பாடுகிறேன்
காலையும் மாலையும் எந்த வேளையிலும்
துதிபாடல் ஓய்வதில்லை
காலமே மாறினும் சூழ்நிலை மாறினும்
நாவில் துதி ஓய்வதில்லை

வானம் பூமி யாவும் ஆளுகின்றவரே
ராஜ்ஜியம் எல்லையில்லையே(உம்)
என்னையாளும் ராஜாவே உம்
அன்பின் எல்லையில்லையே

வாக்கு மாறா தேவன் வாக்குத்தத்தம் தந்து
சொன்னதெல்லாம் செய்தீரே (நீர்)
பொய்யுரையா என் தேவனே நீர்
மனம் மாறுவதில்லையே

வாக்குக்கடங்காத பெருமூச்சோடு
வேண்டுதல் (எனக்காகவே) செய்கிறீர்
எனக்காக யாவையும் நீர்
செய்து முடிக்கின்றீர்

பாவங்களுக்கேற்ற தண்டனை தராமல்
மன்னிப்பையும் தந்தீரே(நீர்)
இரக்கத்தில் ஐஸ்வர்யமே உம்
இரக்கத்தில் முடிவில்லையே

பாதாளத்தில் நானும் போய் சோர்ந்திடாமல்
பாதுகாத்துக் கொண்டீரே(நீர்)
என் நீதியால் இல்லையே உம்
சுத்த கிருபையினாலே

Yesu raja nandri endru lyrics songs, Yesu raja nandri endru song lyrics, Yesu raja nandri endru Lyrics Song Chords PPT - இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create