வருவீர் எப்போது மணாளா!?
வரும் நேரம் ஆகவில்லையா?!
1. வாழ்வில் ஜீவன் தந்து
மீட்டனையே
தாழ்வில் நின்று தூக்கி
எடுத்தனையே
நாள்தோறும் ஏழைக்கு
உம் நினைவே
பாழ் உறும் லோகில் நீர்
என் துணையே
2. அன்பால் அணைத்த
அருள்கரமே
பண்பால் உயர்ந்த
பராபரமே
இன்சொல் அளிக்கும்
உம் முகமே
துன்பம் காணாதினி என்
அகமே
3. எண்ணி எண்ணி
இயேசு இன்பநாட்டை
புண்ணியன் போய்
கட்டும் நித்திய வீட்டை
என் இதயம் சோகம்
கொண்டதாலே
விண்ணின்நாதா வேகம்
வந்திடுமே
4. உம் வரவால் உள்ளம்
வாடிடுதே
உம்மைக்கான கண்கள்
நாடிடுதே
என்று என் வாஞ்சை
நிறைவேறுமோ
அன்று என் உள்ளமதை
தாங்குமே
5. வாரும் வாரும் நீர்
விரைவாகவே
தீரும் என் குறைகள்
நிறைவாகவே
சுத்திகரித்து
சொல்லற்கரிய
மத்திய வானில் மணம்
புரிய
Varuveer Eppothu Manala!? lyrics songs, Varuveer Eppothu Manala!? song lyrics, Varuveer Eppothu Manala!?Lyrics Song Chords PPT - வருவீர் எப்போது மணாளா
true
true