Parisutha Pathayil Endrume Naan
பரிசுத்த பாதையில் என்றுமே நான் சென்றிட
பரனே நான் என்னையே முற்றிலும் படைக்கிறேன்.
1. இயேசுவே உம்மழகு என்னில் பிறர் காண
இவ்வேளையில் என்னை தத்தம் நான் செய்கிறேன்
இறங்கிடுவீர் எந்தன் வேண்டுதல் கேட்டு
இனிமேல் இவ்வுலகில் பிரகாசித்திடவே. (பரிசுத்த)
2. என்னை காண்போர் உம்மை காண உந்தன் சாயலை
தரித்தீர் இலோகத்தில் நான் தூய்மை அடைய
ஈசானே நீ அருள் புரிந்திடுவீரே
இன்று இந்த ஜெபவேலையில் பெற்று எழும்ப (பரிசுத்த )
3. ஆவியில் மென்மேலும் அனலாய் நான் ஜீவிக்க
ஆசீர் பொழிந்திடும் எந்தன் நேசர் இயேசுவே
மாசில்லா பரிசுத்தம் அடைந்திடவே
மன்னவனே உம் கிருபை ஈந்திடுவீரே (பரிசுத்த )
4. உம் பெலன் இல்லாமல் யாதும் செய்ய இயலேன்
உலகினில் ஜீவ சாட்சியாக நான் விளங்கிட
உன்னத பெலன் ஈந்து நினைத்திடுமே
உமக்காக ஜீவிப்பேன் எக்காலத்திலுமே (பரிசுத்த )
5. மண்ணுலக இன்பங்கள் ஒன்றும் வேண்டேனே
மாமிச இச்சைகள் நித்தம் நான் வெறுக்கிறேன்
விண்ணவர் சாயலை மகிமையாய் பெற்று
கண்ணிமைக்கும் பொழுதில் வேகம் மாறிடுவேனே (பரிசுத்த)
Parisutha Pathayil Endrume Naan lyrics songs, Parisutha Pathayil Endrume Naan song lyrics, Parisutha Pathayil Endrume NaanLyrics Song Chords PPT -தேவன் அருளிய சொல்லி முடியா
TRUE
TRUE