கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே
நான் பயப்படேன்! பயப்படேன்!
அல்லேலூயா அல்லேலூயா (4)
1. கர்த்தர் என் நிழலாய் இருக்கின்றார்
கண்மணி போல் என்னை காக்கின்றார்
திகைக்கும் போது திடன் கொள் என்று
தினமும் என்னை தேற்றுகின்றார்.
2. அவரே எந்தன் அடைக்கலமாம்
நம்பியிருக்கிற கன்மலையாம்
அவரை நோக்கி அமரும் வேளை
அன்பரே அனைத்தும் செய்திடுவார்
3. மரண இருளில் நான் நடந்தாலும்
மன்னவன் என்னோடு இருக்கின்றார்
கோலும் தடியும் என்னைத் தேற்றும்
கோணல் வழியும் செவ்வையாகும்
Karthar En Patchathil Irukkaiyilae lyrics songs, Karthar En Patchathil Irukkaiyilae song lyrics , Karthar En Patchathil Irukkaiyilae Lyrics Song Chords PPT - கர்த்தர் என் பட்சத்தில் இருக்கையிலே
true
true