கல்வாரி என்னும் தோட்டத்திலே
எம் கர்த்தர் தொங்கும் மரத்தினிலே
ஏழு பூக்கள் பூத்ததையா
அது ஜீவ பூக்கள் ஆனதையா
1. ஆணிகள் அடித்து வதைத்தவர்க்கு
உம் மேனியில்
வேதனை கொடுத்தவர்க்கு
பிதாவே இவர்களை மன்னியும் என்று
முதலாம் மலர்ந்த
மன்னிப்பு - சிலுவையில்
2. குற்றம் புரிந்த ஒரு கள்ளனுக்கு
அவன் சத்தம் அறிந்த
அன்பு மனம் உமக்கு
இன்றைக்கு பரதீசியிலிருப்பாய் என்று
இரக்கத்தால் மலர்ந்த
இரட்சிப்பு - சிலுவையில்
3. ஈன்றெடுத்த அன்னை துடிக்கக் கண்டு
உம் இதயத்திலே பாச உணர்வு கொண்டு
ஸ்திரீயே அதோ உன் மகன் என்று
பாசத்தால் மலர்ந்த பராமரிப்பு - தாய்
4. கைவிடப்பட்டோரைக் காக்க வந்து
மாந்தர் கண்ணீர் யாவையும்
துடைக்க வந்தீர் - என் தேவனே
ஏன் என்னை கைவிட்டீர் என்று
தனிமையில் மலர்ந்த
தவிப்பு - சிலுவையில்
kalvaari Ennum Thottaththilae En lyrics songs, kalvaari Ennum Thottaththilae En song lyrics , kalvaari Ennum Thottaththilae En Lyrics Song Chords PPT - கல்வாரி என்னும் தோட்டத்திலே
TRUE
TRUE