சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத
திருவருளிலமே கணுறும் உணரும்
தெருளம்பகமே இனிதுறும் நிசமிது
ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய
புவியோர் பதிவான் புகநிதியே
புனருயி ருறுமுழுக் கருளினிதே
புதுவிடமே,புகுமணமே,புதுமதியே
புரிவொடு இனிதருள்
பேயடே புவி பேதை மாமிசம்
பேணிடாதடியாருனைப்
பேறு தந்தவனே யெனச்சொலி
பேணிடத்துணை ஈவையே
பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்
பிசகொழியே திடமளியே
பெருமலையினிலரு முயிர்தரும்
ஆலய மது நிறைவாக
அவைக் குறை வொழிந்தேக
அவரவருனதில மெனமனவிடர்சாக
அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்
ஆலய பர னேச
ஆசுக மது வீச
ஆரண மொழி பேச
ஆ புது எருசலையாம்
ஆலய மொரு நிலையாம்
அது நிக ரெது
Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Senaigalin Karthare Nin Songs, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Senaigalin Karthare Nin songs, Senaigalin Karthare Nin songs lyrics, tamil christian songs lyrics