விந்தையின் ராஜனாம் என் நேசர்
வான வீதியில் செல்வதை கண்டேன்
சென்றேன் பின் சென்றேன்
கண்டேன் கண் குளிர
கண்டேன் கண் குளிர கண்டேன்
1. பனி படர்ந்த மலையிலே
அன்றோர் இரவில் பெத்லகேமிலே
உலகின் பாவம் போக்கவே
பிறந்தீர் மானிடனாய்
கண்டேன் என் ராஜனைக் கண்டேன்
தெய்வத்தின் சாயலாய் கண்டேன்
சிந்தை மகிழ்ந்து சொல்கிறேன் ராஜன்
புகழை
2. பொன் வெள்ளி தூப வர்க்கத்துடன்
வான சாஸ்திரிகள் வந்தனரே
பணிந்தனர் இயேசு ராஜனை
புல்லணையிலே
கண்டேன் என் ராஜனைக் கண்டேன்
தெய்வத்தின் சாயலாய் கண்டேன்
எட்டுத் திசைக்கும் சொல்கிறேன் ராஜன்
புகழை
விந்தையின் ராஜனாம் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Vindhaiyin Rajanam songs, Vindhaiyin Rajanam songs lyrics, விந்தையின் ராஜனாம் என் நேசர்