1 இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதா , உந்தன் பாதத்தில்
எம் பாவக் கண்ணால் காண்கிறோம்
உம தாசர் பூர்வ பக்தராம்;
சீனாய் மலை மேல் கற்பனை
வானோரால் பெற்ற மோசேயை;
தீ, காற்று, கம்பம் கன்டோனை
மா மேன்மை சத்தம் கேட்டோனை.
2 இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதர் சீஷர் மூவரே;
கற்பாறை போன்ற பேதுரு
நிற்பான் எப்பாவம் எதிர்த்து;
இடி முழக்க மக்களாம்;
கடிந்த பேச்சு யாக்கோபாம்;
" அன்பே கடவுள்" போதிப்பான்
உன்னத ஞானியாம் யோவான்
3 இவ்வுயர் மலை மீதிலும்
உயர்ந்து உள்ளம் பொங்கிடும்;
பரமன் ஜோதி தோன்றிடும்
பகலோன் ஜோதி மாய்த்திடும்;
மா தூய ஆடை வெண்மையே,
ஆ மாந்தர் காணா விந்தையே;
நாம் மேலும் மேலும் ஏறியே
நம் நாதர் ரூபம் காண்போமே
4 இவ்வுயர் மலை மீதினில்
எம் நாதர் தூய பாதத்தில்
மா இருள் மேகம் மூடினும்
மா ஜோதி பார்வை வாட்டினும்
காண்போமே தெய்வ மைந்தனை
கேட்போமே தெய்வ வார்த்தையை
"இவர் என் நேச மைந்தனார்;
இவர்க்கு செவி கொடுப்பீர்."
பாமாலை: 156 இவ்வுயர் மலை மீதினில் - Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Ivvuyar Malai meedhinil songs,Ivvuyar Malai meedhinil songs lyrics